சனி, 8 டிசம்பர், 2018

காமராஜர் பெயர் சொல்லாத நன்றி கெட்ட பாப்பையா பட்டி மன்ற உறுப்பினர்கள்.

காமராஜர் பெயர் சொல்லாத நன்றி கெட்ட பாப்பையா பட்டி மன்ற உறுப்பினர்கள்.
நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த பாரதி விழாவில் நடைபெற்ற பாப்பையா பட்டி மன்றம் பார்த்தேன்.
தலைப்பு - இந்திய சுதந்திர போரின் வெற்றி , அகிம்சையான போராட்டத்தால் கிடைத்ததா? அல்லது தீவிரவாத போராட்டத்தால் கிடைத்ததா? என்பதே.
பேசியவர்களின் ஒரு சிலர் மட்டும் , முத்துராமலிங்க தேவர், வேலுநாச்சியார், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, பாரதி போன்ற தமிழக விடுதலை வீரர்கள்   பற்றி  பேசினார்கள்,தேசிய  விடுதலை போராட்டத்தில், தமிழகத்தில் ,பங்கேற்ற  தலைவர்கள் பெயரை கூட சொல்லாமல் , பட்டி மன்றம் முடிவு பெற்றது , மிகவும் வருத்தமாக இருந்தது.
காந்திஜியின் தலைமை ஏற்று , தன் இளமை முழுவதையும் இந்திய  விடுதலை வேள்வியில் செலவு செய்த காமராஜர் பெயரை சொல்லாமல், கொடி ஏந்தி உயிர் விட்ட திருப்பூர் குமரன், உப்பு சதியாகிரகத்தை , தமிழகத்தில் தலைமை ஏற்று நடத்திய ராஜாஜி , பாராளுமன்றத்தில், சிங்கமென கர்ச்சித்த  தீரர் சத்யமூர்த்தி , ஜீவா, போன்ற எண்ணற்ற தமிழக விடுதலை வீரர்களை பற்றி சொல்லாமல் , வட இந்திய தலைவர்கள் பற்றி பேசி , நம்மை பற்றிய அறிவு நமக்கு இல்லை என்பதை  உணர்த்திய சாலமோன் பாப்பையாவையும், மற்ற பட்டி மன்ற உறுப்பினர்களையும் கடுமையாக கண்டிக்கிறேன்.
உலகிலேயே , முதல் முதலாக ஒரு கவிஞருக்கு  அரசு விழா எடுத்தது , காமராஜர் ஆட்சியில், தேசிய கவி பாரதியாருக்கு தான். பாரதி , நம் மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டி நின்றான். அதை , நிறைவு செய்யும் விதமாக , நம் மக்களை படிக்க வைத்த காமராஜரை , பற்றி பேசாமல் , பாரதி விழா எப்படி நிறைவு பெறும்?

வெள்ளி, 16 நவம்பர், 2018

Andhra Pradesh, Southern region, in my view.

There was a chance to live in Andhra Pradesh. Professor Kalpalatha Reddy Madam, my former colleague , got me the opportunity to work at Sri Venkateswara Engineering College for Women , Tirupati for last few months

  Food is the first topic , I want to speak. High quality and tasty food is available at Tirupati,  I think about it many times that this is a good, quality meal.The Groundnut chutney is very nice. One karam chatni which is really the pride of Andhra Pradesh. It is available at all days.

   The God of seven hills lives here. We have the feeling of God always in our heart. Under the footsteps of the hill  we can see the college  which is always under the view of  lord Venkateshwara.

  When we go to Tiruchanur, Tamil can be heard, lot of Tamil people come here to worship Goddess. The announcement will be coming from the speaker, in Tamil. Tamil kings Cholas ​​built the temple, Tamil lives here today also.  Laddu will be different and very sweet at Thiruchanur.

  If you go to Alipiri which is the starting point of the pilgrimage path to Tirumala Temple.  We can worship the Kali temple which is at the top of the hills in this side. It is a very nice place. The prasadam  is always distributed.

  I got the opportunity to pray at the Thirumalai temple. The history of the Tamils is linkering us here, I feel .  The Rayar Tower, built at the foot of the hill on the foot path way , refers to the period 1400s AD. It was the time that Tamils were ruled by Vijayanagara empire. The Mysore tower will be reached at some height next. Vijayanagar rule was the Kannada and Telugu people's rule. After the rule came to an end in 1565, the Mysore kings continued to rule with power. You can see the statues of the Tamil Alwars on the away to the temple. It is noteworthy to mention here that the saints sang their songs in Tamil. A  Mandapam is displaying an information that Trichy Srirangar' swamy idol  was kept in a hall at Thirumalai temple and worshiped from 1300 to 1370 AD, due to the political instability of that period, Tamil Nadu was ruled by Muslim rulers in that period.

   The Tamil inscriptions on the walls surrounding the Thirumalai Venkatesa Temple, are telling us that  the temple was built by the Cholas at the initial stage 1000 years earlier.

 The darshan of the  God of seven hills is not easy  to obtain. But when we got his darshan, we can realize the great attainment which will be taking us to a higher level of peace and power. I feel that his blessing is needed for Tamil people ​​always. That is my wish .

    About the students, they are the high standard students. Lot of students are rural students, but are very high level in giving respect and in their confidence. When we walk into the class, welcome will be very exciting one. The black colour people are  less in numbers, the colored students are too many and beautiful. Students will be forthcoming in clearing their doubts, they will ask questions in  the class hour and try to understand the lessons which  are difficult, I will tell you that as a  teacher, I have a good experience here

  About colleagues who work with me, they are very good .This college is run by a  professor. who belongs to Reddy community. All caste people can be seen here working in harmony. Our colleagues are  very affectionate as a family . All the people are very fond of me and are very helpful. It is a great honor to work here.

 I see a high standard society here. Tamil society, I have to say that we have to go a long way.

ஆந்திராவை பார்க்கிறேன்

    ஆந்திராவில் வாழுகின்ற வாய்ப்பு கிடைத்தது. என்னோடு பணியாற்றிய பேராசிரியர் கல்ப லதா ரெட்டி மேடம், ஆந்திராவில் முதல்வர் பதவி கிடைத்ததால், எனக்கும் ஆந்திராவில் உள்ள , திருப்பதியில் பணி ஆற்ற கூடிய வாய்ப்பு கிட்டியது. கடந்த சில  மாதங்களாக திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பெண்கள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் பணி
.
 முதலில் சொல்ல வேண்டுமானால் உணவு. மிகவும் தரமான, நல்ல சாப்பாடு திருப்பதியில் கிடைக்கிறது. நிறைய நேரங்களில் நினைத்து பார்க்கிறேன், இது ஒரு நல்ல சாப்பாடு என்று,.வேர்க்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கிறது.ஒரு கார சட்னி, அது ஆந்திராவின் பெருமை என்றே சொல்ல வேண்டும்,. எல்லா நாட்களிலும் கிடைக்கும்.

   ஏழுமலையான் வாழுகின்ற ஊர்., அதனுடைய உணர்வு எப்போதும் உண்டு. மலை அடி வாரத்தில் தான் கல்லூரி, மலையை பார்த்தாலே வெங்கடேசலாபதியை பார்த்த உணர்வு வரும். திருச்சானுர் சென்றால் , அம்மனை வணங்கி வரும்போது தமிழ் காதில் ஒலித்து கொண்டே இருக்கும். அவ்வளவு தமிழர்கள் வருகிறார்கள். தமிழில் , ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தி வந்து கொண்டே இருக்கும். தமிழர்கள் கட்டிய கோயில், தமிழ் இன்றும் வாழ்கிறது. இங்கே. லட்டு வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
 அலிபிரிக்கு போனால், திருமலைக்கு , மலையேறும் ஆரம்ப பாதையின் முதல் படிகள்ஆரம்பிப்பதை பார்க்கலாம் .  இங்கே இருந்து காளி கோயில் கோபுரம் பார்த்து வணங்க முடியும். மிக்க ரம்மியமான இடம் . பிரசாதம் எப்போதும் கிடைக்கும்.
 மலையில் வெங்கடேச பெருமாளை தொழும் வாய்ப்பு கிடைத்தது.தமிழர்களின் வரலாறு , இங்கே காணக்கிடைப்பதாகவே உணர்கிறேன்.

   மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்ட  ராயர் கோபுரம் 1400 களை குறிக்கிறது.தமிழர்கள் விஜயநகர மனனர்களால் ஆளப்பட்ட காலம் அது. சிறிது  உயரத்தில் மைசூரு கோபுரம் வருகிறது. விஜயநகர ஆட்சி கன்னட மற்றும் தெலுங்கு மக்களின் ஆட்சி தான். அந்த ஆட்சி 1565 இல் முடிவுக்கு வந்த பிறகு மைசூரு கன்னட அரசர்கள் பலத்தோடு  தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர். இன்னும் தூரத்தில் தமிழ் ஆழ்வார்களின் சிலைகளை காணலாம். ஆழ்வார்கள் தமிழில்தான் பாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை கோயிலில் ஒரு மண்டபத்தில்  1311 முதல் 1370 வரை , திருச்சி ஸ்ரீரங்கர் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூசை செய்யப்பட்ட மண்டபம் என்று எழுதி இருக்கிறது.

   திருமலை வேங்கடவானின் சுற்றுப்புற சுவர்களில் முழுமையாக செதுக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்கள் , சோழர்கள் கட்டிய கோயில் என்று உணர்த்தி கொண்டு இருக்கிறது.
 ஏழுமலையானின் தரிசனம் எளிதாக கிடைப்பதில்லை. ஆனால் சக்தியின் வடிவாக அவர் காட்சி  தருவது நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்வதாக உணர முடிகிறது.அவனுடைய ஆசி தமிழர்களுக்கு எப்போதும் வேண்டும் என்றே உணர்கிறேன்.  மனமும் சொல்கிறது.

    மாணவிகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால், தரமான மாணவர்களாக இருக்கிறார்கள். மிகவும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.நிறைய பேர் கிராமப்புற மாணவர்கள்தான் , ஆனால் மரியாதை செய்வதில் மிகவும் உயர்ந்தவர்கள். நாம் வகுப்புக்குள் செல்லும் போதே , வரவேற்பு மிகவும் உற்சாகமானதாக இருக்கும். கருப்பு இங்கே குறைவு, கலரான மாணவர்கள் அதிகம். பாசமான மாணவர்கள் மிகவும் அதிகம்..அழகானவர்கள் அதிகம் பேர் என்றே சொல்ல தோணுகிறது.ஆசிரியர்களிடம் வந்து வகுப்பில் புரியாத பாடத்தை , கேட்கும் ஆவலும் சுய நம்பிக்கையும் கொண்டவர்கள். என்னுடைய  ஆசிரிய வாழ்வில் நல்ல அனுபவம் என்றே சொல்வேன்.

 என்னோடு பணியாற்றும் சக ஆசிரியர்கள் பற்றி சொன்னால் , இந்த கல்லூரி ஒரு ரெட்டி சமூக பேராசியர் நடத்தும் கல்லூரி. எல்லா சாதி மக்களும் இங்கே  வேலை செய்வதை பார்க்க முடிகிறது. மிகவும் பாசமானவர்கள். குறிப்பாக அனைத்து  மக்களும் என்னிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். கடவுளுடைய ஆசீவாதமாகவே இதை பார்க்கிறேன் . மிகவும் உதவி புரிபவர்களாகவே இருக்கிறார்கள்.

 உயர்வான சமுதாயம் இங்கே இருப்பதை பார்க்கிறேன். தமிழ் சமுதாயம் , நான் கண்ட வரையில் , நிறைய தூரம் வர வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது .
   

சனி, 2 ஜூன், 2018

காமராஜரை காதலித்த கருணாநிதி

காமராஜருக்கும் கருணாநிதிக்கும் இருந்த உறவு மிகவும் விசித்திரமான ஓன்று.  காமராஜர் கருணாநிதியை விட 20 ஆண்டுகள் மூத்தவர்.
இருவரும் அரசியல் களத்தில் இரு துருவங்களை சேர்ந்தவர்கள் ,  ஆனாலும் அவர்களிடையே வெறுப்பும் அன்பும் கலவி இருந்ததாகவே, அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

காமராஜர் தனது சிறு வயதிலேயே தேசிய இயக்கமான காங்கிரசில் சேர்ந்து உழைத்து வந்தார். மு கருணாநிதியும் தனது இளம் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்து தேசியத்தை எதிர்த்து வந்தார். இருவரும் எந்த பின் பலமும் இல்லாத சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் இருவரும் எதிர்மறை கொளகைகளை சுமந்து தங்கள் இளமையை கழித்தனர்.
காமராஜர் சுதந்திர போரில் பங்கேற்று உழைத்தார். கருணாநிதி சுதந்திரத்தை எதிர்த்து , விடுதலை வீரர்களை எதிர்த்து  பேசியும் ,எழுதியும் வந்தார் ..

காமராஜர் காந்தியை புகழ்ந்து பேசி விடுதலை போரில் பங்கேற்றார். கருணாநிதி காந்திஜியை கொச்சை படுத்தி எழுதி திராவிட இயக்க கொள்கையை கடைபிடித்தார். காமராஜர் தமிழக  விடுதலை போராட்டத்தை  8 ஆண்டுகள்  தலைமை ஏற்று நடத்திய போது, அதற்க்கு எதிராக செயல் பட்டவர் மு க .

காமராஜர்  1947 ஆம்  ஆண்டு ஆகஸ்டு 15 ஐ தமிழர்களின் விடுதலை நாளாக தலைமை ஏற்று சென்னையில் யானைகள் குதிரைகளுடன் ஊர்வலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போது, மு க அவர்கள் தஞ்சாவூரில் விடுதலை தினத்தை  எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

காமராஜர் காங்கிரசின் தலைவராக பணியாற்றிய காலத்தில் அதை சற்று தள்ளி இருந்து பார்த்து வந்தார்.காமராஜர் 1954 இல் முதல்வரான போது, தி மு க சட்ட சபையில் இல்லை. அவர்கள் 1957 இல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களில் மு க வும் ஒருவர். காமராஜரை பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு அவருக்கு அப்போது  கிடைத்தது . ஆனால் ஒரு எதிர்  கட்சி காரராக அவர் பார்வை அமைந்தது.

ஐந்து ஆண்டு கால சட்டமன்ற விவாதங்களில் காமராஜர் மேல் வருத்த பட்ட சம்பவங்கள் சில  நிகழ்ந்தன. அதுதான் மு க வின் முதல்சட்ட மன்ற அனுபவம்.ஆனால் காமராஜர் 20 வருசத்துக்கு முன்பே சட்டசபைக்கு வந்தவர். காமராஜரின் சிலை அந்த காலத்தில் தான் தி மு க மாநகராட்சி மூலம் சென்னையில் திறக்க பட்டது.

1962 தேர்தலில் சக்தி மிகுந்த முதல்வராக விளங்கிய காமராஜர், தி மு க வின் 15 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தோற்கடிப்போம் என்று  சொல்லி தேர்தலை சந்தித்தார். ஆனால் மு க தமது தொகுதியான  குழித்தலையை விட்டுவிட்டு தஞ்சாவூருக்கு மாறி விட்டார் . அந்த தேர்தலில் அனைத்து பழைய தி மு க உறுப்பினர்களும் தோற்று விட்டனர் , ஆனால் கருணாநிதி மட்டும்  வென்று விட்டார்.

பின்பு மு க வின் தாயார் இறந்தபோது முதல்வர் காமராஜர் அவர் வீட்டுக்கே சென்று அஞ்சலி செலுத்தியதை மு க நிறைய தடவை சொல்லி இருக்கிறார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மு க முழுமையாக ஈடு பட்ட போது காமராஜரை கடுமையாக தாக்கி பேசிய சம்பவங்கள் நிகழ்ந்தன.
1967 தேர்தலில் காமராஜர் தோற்கடிக்க பட்டபோதும் காமராஜர் மேல் இருந்த கோபம்  குறைந்ததாக தெரியவில்லை. ஏனென்றால் 1969 இல் நடந்த நாகர் கோயில் இடைத்தேர்தலில் காமராஜை எதிர்த்து தீவிர பிரசாத்தை மு க மேற்கொண்டார். அப்போது கடுமையான வார்த்தைகளை அவர் பேசியது உண்மை.

காமராஜரை கால் ஊன்ற விட கூடாது என்பதில் தீவிரமாக இருந்த அவர் 1971 தேர்தலில் இந்திரா காந்தி யுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். காமராஜர் கட்சி பெருந்தோல்வி அடைந்தது.
அதன்பிறகு எம் ஜி ஆர் புது கட்சி ஆரம்பித்தவுடன் , காமராஜர் அவருடன் சேர்ந்து தன்னை எதிர்பார் என்று நினைத்தாரோ என்னோவோ. ஆனால் காமராஜர் எம் ஜி ஆர் யும் எதிர்க்க ஆரம்பித்ததால் காமராஜர் மேல் மதிப்பு வர ஆரம்பித்ததாகவே உணர முடிகிறது.

மு க மதுவிலக்கை தளர்த்திய போது அதை எதிர்த்து பெரிய போராட்டம் நடத்தினார். அப்போது 50 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் ஜெயிலில் அடைக்க பட்டனர். அவர்களை விடுவிக்க அரசு மறுத்தது. புழல் ஜெயிலில் அடைக்க பட்ட குமரி ஆனந்தனை பெயிலில் வர சொன்ன போது அவர் மறுத்துவிட்டார். உடனே காமராஜர் ,  தொண்டர்களை விடுதலை செய்யாவிட்டால் தானே நேரடியாக போராட போவதாக அறிவித்தார். இதை அறிந்தவுடன் அனைவரையும் விடுவிக்க மு க உத்தரவிட்டார்.
மு க ஸ்டாலின் திருமணத்தை காமராஜர் தலைமையில் தான் நடத்தினார்.

இந்திரா காந்தி யுடன் மு க வுக்கு  கருத்து வேறுபாடு வந்தவுடன் , காமராஜரிடம் மு க செய்யும் தவறுகளை அவர் கட்சியினர் சொன்னபோது , அவை சிறிய விஷயமாக கருதி ,  இந்திரா காந்தி செய்யும் தவறுகளில் அவர் அதிகமாக கவனம் செலுத்தினார்.

காமராஜர் இறந்தபோது , சென்னையில் அவருடைய இறுதி சடங்குகளை ஒரு மகனை விட சிறப்பாக செய்ய இரவு பகலாக உழைத்தார் மு க. அன்றய  அவருடைய செயல்பாடுகள் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் நினைத்து பார்க்கிறார்கள்.

 காமராஜர் மறைவுக்கு பிறகு பணம் பற்றாக்குறையால் அவர் காரை காங்கிரஸ் கட்சி ஒரு காபி கம்பெனி முதலாளிக்கு விற்று விட்டனர் . இதை கேட்ட உடனே மு க, காமராஜர் போன காரில் காபி கம்பெனி முதலாளி போவதா என்று கேள்வி எழுப்பினார். உடனடியாக காரை திரும்ப காங்கிரஸ் கட்சி வாங்கி விட்டனர்.

காமராஜர் பிறந்த நாள் அன்று "விருதையில் பிறந்து வீரனாக வளர்ந்தாய்" என்று ஆரம்பிக்கும் கவிதையை படைத்தார்.

பின்னாளில் காமராஜர் சம்பந்தமான பல  விழாக்களில் பங்கெடுத்து, அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ் நாடு எங்கும் கொண்டாட சட்டம் இயற்றி காமராஜரின் உழைப்புக்கு நன்றி செலுத்தி பெருமை சேர்த்தார் வீரர் முக.